செவ்வாய், 26 மே, 2009

தெய்வமே!

இராமா

விபிக்ஷனனுக்கு ஆட்சி தந்த இராமா,
எம் மக்களுக்கு மீட்சி தாராய் இராமா,
அன்று ராவனனால் ஒரு போர்,
இன்று ராஜபக்சேவால் பெரும் போர்!
அனுமனே
சீதையைக் காக்க கடல் கடந்தாய்,
இன்று ஈழத்தை காக்க ஏன் மறந்தாய்?
சுனக்கம் ஏன்? தமிழன் என்பதால்?
உனக்கும் ஈரமில்லையோ நெஞ்சில்?
சிவனே
சித்தமெல்லாம் சிவமயமே என,
சிந்திக்கும் எமது சுற்றங்களை,
சிதைத்துவிட்டாயே,
செந்நீரில் சிதறவிட்டாயே!

கருத்துகள் இல்லை: