வெள்ளி, 12 ஜூன், 2009

இயற்கை


அழகே,
நீ நடந்த
பாதையிலே,
நறுமலர்களின்
நாட்டியங்கள்,
உன்
பாத‌ சுவ‌டு
பட்டு,
பூக்களுக்கும்,
புது வாச‌ம்,
உன்
செவ்விதழ்
சிந்திய‌தோ,
செந்தூரமாய்,
அந்தி வான‌ம்,
உன‌
சிரிப்பின்
சிதறலிலே
மணிமணியாய்
மழைத்துளிகள்

இயற்கை
எனும்
இனியவளே
உன்
இயக்கமன்றோ
இந்த புவி
இயக்கம்!

கருத்துகள் இல்லை: