வியாழன், 2 ஜூலை, 2009

வலியும் வலிமையும்


மேகங்கள்
மறைத்தாலும்
சூரியனுக்கு
மரணமில்லை!

ஆர்ப்பரித்தே
அலை எழுவதால்
ஆழ்கடலும்
குறைவதில்லை!

தொலைந்திடுவோம்
என பயந்து
தென்றல்
தவழ
மறுப்பதில்லை!

இதயமே
இழப்புகளை
எண்ணி
ஏனிந்த பயம்

எல்லா
ஆரம்பத்திலும்
முடிவுண்டு
எல்லா
முடிவிலும்
ஆரம்பமுண்டு

கண்ணீரைத்
துடைத்துவிடு!
கவலைகளை
துரத்திவிடு!
நல்ல நாள்
நாளை வரும்
நிறைந்த இன்பம்
நமக்குத் த‌ரும்!

கருத்துகள் இல்லை: