புதன், 18 நவம்பர், 2009

விழித்தூரல்கள்


எந்தன் இனத்தின் கண்கள்,
இன்று ஆகிப்போயின புண்கள்...!

கருணையற்ற ஓநாய்கள் எங்கள் இனத்தின் கன்றுகளை கடித்துக்குதறி ருசிக்கின்றன...,
(தற்)காத்திட வேண்டிய எந்தன் இனம்
கைகட்டி களிப்புடன் ரசிக்கின்றது...!

நம்பிய கரங்களின்
நகங்கள் எம் இளைஞனை
நாராய் கிழித்தெரிய,
நிர்க்கதியாக அவர் குடும்பம்
நிலைகுலைந்தே
நடுத்தெரு ஏகிடுதே...!

இற‌ந்தவர் எனக்கு உறவு அல்ல,
யாரோ எவரோ அறிந்ததில்லை,
இனத்தால், மொழியால், என் உறவே, அவர்
இறப்பு எனக்கும் பேரிழப்பே...!
ஏனோ என் உயிர் வலிக்கிறதே...!
எந்தன் ரத்தமும் இன்று கொதிக்கிறதே...!

வறுமையின் பிடியில் வாழ்விழந்து,
வருத்தத்தில் வாடுது எந்தன் இனம்,
சேரக் கூடா இடம் சேர்ந்து
சீரழிந்தே நாளும் சிதையுது,

காப்பவர் இங்கு காணவில்லை,
கரை சேர்ப்பவர் யாரோ தெரியவில்லை...!
மேய்ப்பவன் இங்கு சரியில்லை,
மனிதமும் மண்ணில் வாழவில்லை...!

தமிழன் உயிர் என்ன அற்பமா ?
அவன் ஆயுள் என்ன சொற்பமா ?
ஒற்றுமை குலைந்த என் இனமே, நீ
உருப்படும் நாளும் உலகில் உண்டா ...??????????