ஞாயிறு, 14 ஜூலை, 2013

அம்மா


அன்னை என்னும் அரியவள் - நம்
அன்புக்கு என்றும் உரியவள்
அம்மா எனக் கொஞ்சும் மழலைக்கு - தன்
அணைப்பில ம‌ஞ்சம் தருபவள்
உயிரென பிள்ளையைக் காப்பவள் - தன்
உதிரத்தை அமுதென கொடுப்பவள்
குழந்தை உண்ண படைப்பவள்
குலவிளக்கது செழித்திட மகிழ்பவ‌ள்

அருங்குணம் நிறைந்த திருமதி - அவள்
அவனிக்கு வாய்த்த வெகுமதி
தரணி உய்ய வந்தனள் - அவள்
தாயெனும் தவப்பெயர் கொன்டனள்

இன்னோர் உயிரை ஈன்றவள் - அவள்
இறையும் வணங்கும் இனியவள்
போற்றிடும் தெய்வம் பெற்றவளே
அவர்க்கிணை இங்கில்லை மற்றவரே

தாயே நின்தாள் பணிகின்றேன்
தரணியில் நின்புகழ் தங்கிட‌ வாழ்த்துகிறேன்
மறுமுறை மீண்டும் பிறவிகண்டால் - என்
மகளாய் நீவர வேண்டுகிறேன்....