வியாழன், 8 ஆகஸ்ட், 2013

எதிர்நீச்சல்




காலப் பெருவெளியில்
கானலில்
எதிர்நீச்சல்....!

எண்ண வானில்
சிறகடிக்கும்
மனரெளத்திரங்கள்...!

கண் சிமிட்டும்
கணங்களில்
கரைந்தோடும்
கவிதைகளாய்
கண்ணீர்த்துளிகள்...!

மெளன யுத்தங்கள்
மனசெல்லாம்
காயங்கள்...!

முகவரி
தொலைத்த‌
முகாரிகளாய்...!

முடிவைத் தேடி
தொலைந்துபோன‌
மேகங்கள்... !

அலைமோதும்
நினைவுகள்
அழியாத 
பிம்பங்கள்...!

வானம்
விரித்த‌
பாதையில்
வாழ்க்கை
விதைத்த‌
பயணியாய்...!

மீண்டும் மீண்டும்
தாயின் கருப்பைதேடும்
ஒற்றைப் புள்ளியாய்
இந்த வாழ்வோடு...!


 
 சிவனேசு
பினாங்கு