ஞாயிறு, 31 மே, 2009

காதல்


அன்பே,
நம் உறவு,
சரீரத்தின் தாளம் அல்ல,
சலனத்தின் நாதமும் அல்ல,
அன்பின் வேதம்,
இரு ஆத்மாக்களின் சங்கமம்

வியாழன், 28 மே, 2009

மாவீரன் பிரபாகரன்

யார் யாரோ பிறப்பார்!
யார் யாரோ இருப்பார்,
வந்தவர் யாவரும் நிலைப்பதுண்டோ?
வீரத்தின் விளைநிலம் ஆனதுண்டோ ?
உம்போல் வீரன்
உலகினில் இல்லை
ஞாயிறு உள்ளவரை,
உம் ஞாபகம் அழிவதில்லை,
தமிழ் பேச்சு உள்ளவரை,
உம் ஆட்சி மறக்காது
உயிர் மூச்சு உள்ளவரை,
உம் மாட்சி மறையாது!

செவ்வாய், 26 மே, 2009

தெய்வமே!

இராமா

விபிக்ஷனனுக்கு ஆட்சி தந்த இராமா,
எம் மக்களுக்கு மீட்சி தாராய் இராமா,
அன்று ராவனனால் ஒரு போர்,
இன்று ராஜபக்சேவால் பெரும் போர்!
அனுமனே
சீதையைக் காக்க கடல் கடந்தாய்,
இன்று ஈழத்தை காக்க ஏன் மறந்தாய்?
சுனக்கம் ஏன்? தமிழன் என்பதால்?
உனக்கும் ஈரமில்லையோ நெஞ்சில்?
சிவனே
சித்தமெல்லாம் சிவமயமே என,
சிந்திக்கும் எமது சுற்றங்களை,
சிதைத்துவிட்டாயே,
செந்நீரில் சிதறவிட்டாயே!

பெண்மை

பெண் இயற்கையின் சரிபாதி......

மனைவி கண‌வனின் சரிபாதி.....


தாய் இறை‌வ‌னின் ச‌ரிபாதி...























































திங்கள், 25 மே, 2009

மனிதன்

மனிதன்

இறைவன் மனிதனை படைத்தான்,
மனிதன் மதங்களை படைத்தான்,
இறைவ‌ன் உல‌கினை ப‌டைத்தான்,
ம‌னித‌ன் உயிர்க‌ளை வ‌தைத்தான்!

இரக்கமற்ற மனிதனே,
அரக்க குணம் கொன்டவனே,
இறைவன் சாபம் உனை வந்து சேரும்,
இனி வரும் காலம் உன் அழிவை கோரும்!‌