திங்கள், 29 ஜூன், 2009

உயிர்வலி!

அன்பே,

மனசெல்லாம்
மழைச்சாரல்,
துளித்துளியாய்
உன் முகம்

நினைவெல்லாம்
உன் நாதம்,
இதயத்தில்
இன்னிசையாய்
உன் மெள‌னம்!

உருகிவிடவே
விரும்புகிறேன்
சுடராக
நீயிருக்க‌

உயிர்
உதிர்ந்துவிடவே
விரும்புகிறேன்,
நீயின்றி
வாழ்வை
நினைக்க!

2 கருத்துகள்:

S.P.Sivanes சொன்னது…

சூப்பர் !

sivanes சொன்னது…

என் உளரலையும் மதித்து பாரட்டியமைக்கு நன்றி, ரஞ்சிதா!