புதன், 27 நவம்பர், 2013

தேவதைக்கு ஒரு திருமண வாழ்த்து...!


 Registration photo.jpg ஐக் காட்டுகிறது

வரம்தரும் தேவதை
இல்லையென்றேன்
வாழ்வில்
உன்னைக் காணும்வரை...!

தேவதை திருமணம்
புரிவதில்லை
என்றே மனதில்
எண்ணியிருந்தேன்
தேனினும் இனிய குணத்தவளே
உன் திருமணம் கண்டின்று
நம்புகிறேன்...!

தேவதை திருமணம்
புரிவதுண்டு...!
நம் வாழ்விலும் தேவதை
வருவதுண்டு...!
உம்போல் அன்பை வாரித்
தருவதுண்டு...!
அதைக் கண்டுகொன்டேன் நான்
உன்னில் இன்று...!

நீ
அன்பில் என்றும்
தாயானவள்‍
அரவணைப்பில் இன்றும்
சேயானவள்

நீ
உள்ளத்தில் என்றும்
பூப்போன்றவள்
உழைப்பில் அயரா
புயல் போன்றவள்

நீ
உறுதியில் அசையா
மலை போன்றவள்
உண்மை அன்பில் பொழியும்
மழை போன்றவள்

நீ
எந்தன் இதயத்தில்
என்றும் நிலையானவள்
எந்த நிலையிலும்
எனைவிட்டு நீங்காதவள்...!

அழ‌கிய மணாளன் கையோடு என்றும்
அன்பே வாழ்வின் முதலீடு - உங்கள்
மனமும் குணமும் ஒன்றாக - குன்றா
மகிழ்வே வாழ்வு என்றாக 

வளம் பல கொண்டு
நலம் சூழ என்றும்
வாழிய நீங்கள் பல்லாண்டு
வாழ்த்துகிறேன் நான் அன்போடு..!