
காலப் பெருவெளியில்
கானலில்
எதிர்நீச்சல்....!
எண்ண வானில்
சிறகடிக்கும்
மனரெளத்திரங்கள்...!
கண் சிமிட்டும்
கணங்களில்
கரைந்தோடும்
கவிதைகளாய்
கண்ணீர்த்துளிகள்...!
மெளன யுத்தங்கள்
மனசெல்லாம்
காயங்கள்...!
முகவரி
தொலைத்த
முகாரிகளாய்...!
முடிவைத் தேடி
தொலைந்துபோன
மேகங்கள்... !
அலைமோதும்
நினைவுகள்
அழியாத
பிம்பங்கள்...!
வானம்
விரித்த
பாதையில்
வாழ்க்கை
விதைத்த
பயணியாய்...!
மீண்டும் மீண்டும்
தாயின் கருப்பைதேடும்
ஒற்றைப் புள்ளியாய்
இந்த வாழ்வோடு...!

சிவனேசு
பினாங்கு