வெள்ளி, 19 ஜூலை, 2013

நட்பு...!




சகோதரத்திலும் மேலான உற‌வாய்
சகவாழ்க்கைத்துணையினும் உயர்ந்த இணையாய்
உடன் வரும் நட்பு ‍ - அது
உயிரினும் மேலான‌ கற்பு...!
அழும் போது ஆறுதலாய்
அகம் மகிழும் போது பூரிப்பாய்
இடரும் போது உதவிக்கரமாய்
இருகரம் நீட்டும் உயிர்த்துடிப்பாய்...! 

இன்னலின்போது உதவியாய்
இதயத்தை பகிரும் வழித்துணையாய்
எத்தனை சிற‌ப்பு நட்புக்கு
ஏனோ புரியவில்லை நமக்கு…!

காதல் கொன்டு கரைவதல்ல ‍ - நட்பு
காமம் கொன்டு உறைவதல்ல‌
உள்ளத்தில் அமைந்த சிம்மாசனம் -அது
உயர்ந்தவர் அமரும் பொன்னாசனம்...!

போய் வா என்று கூற‌மாட்டேன் - நீ
போனால் வா என்று வேண்டமாட்டேன்;
இற‌ப்பிலும் எனை விட்டு பிரிவதில்லை -  நட்பு 
உண்மையென்றால் நம்மைவிட்டு மறைவதில்லை...!