
| சகோதரத்திலும் மேலான உறவாய் |
| சகவாழ்க்கைத்துணையினும் உயர்ந்த இணையாய் |
| உடன் வரும் நட்பு - அது |
| உயிரினும் மேலான கற்பு...! |
| அழும் போது ஆறுதலாய் |
| அகம் மகிழும் போது பூரிப்பாய் |
| இடரும் போது உதவிக்கரமாய் |
| இருகரம் நீட்டும் உயிர்த்துடிப்பாய்...! |
| இன்னலின்போது உதவியாய் |
| இதயத்தை பகிரும் வழித்துணையாய் |
| எத்தனை சிறப்பு நட்புக்கு |
| ஏனோ புரியவில்லை நமக்கு…! |
| காதல் கொன்டு கரைவதல்ல - நட்பு |
| காமம் கொன்டு உறைவதல்ல |
| உள்ளத்தில் அமைந்த சிம்மாசனம் -அது |
| உயர்ந்தவர் அமரும் பொன்னாசனம்...! |
| போய் வா என்று கூறமாட்டேன் - நீ |
| போனால் வா என்று வேண்டமாட்டேன்; |
| இறப்பிலும் எனை விட்டு பிரிவதில்லை - நட்பு |
| உண்மையென்றால் நம்மைவிட்டு மறைவதில்லை...! |