
என் தந்தை துயிலிடம்
சமயம் வளர்த்தார்,
ஏழைக்கு உணவளிப்பீர், அவர் ஏக்கத்தை துடைத்தொழிப்பீர்....
ஏழடுக்கு மாடியில்...
ஏழை இனம் மட்டும்
ஏனோ வீதியில்...
எந்தன் தாயிடம்
எண்ணற்ற நகைகள்!
ஏழைப் பெண்ணிடம்
இல்லையே நல்லுடைகள்...
அமுதும் தேனும்
நிவேதனம் இறைவனுக்கு
அரைப்பிடி உணவில்லை
நிலகுலைந்த மனிதனுக்கு...
எங்கள் இனத்தின்
ஏந்தல்கள் நாளும்
சமயம் வளர்த்தார்,
சாங்கியம் வளர்த்தார்,
சமத்துவம் மட்டும்
சமைத்திட மறுத்தார்...
அன்பை விதைத்த
ஆன்றோரே...
அறத்தை படைத்த
சான்றோரே...
தர்மம் என்றால்
என்னவென்று
தயவோடிவர்க்கு
எடுத்துரைப்பீர்
மக்கள் சேவையே
மகேசன் சேவை
ஏழை சேவையே
ஏழுமலையான் சேவை...
