வியாழன், 25 ஜூன், 2009

தோழி



வாடி நின்ற பொழுதுகளில்
வான் ம‌ழையாய் வந்த‌வ‌ளே


நாடி வரும் கங்கையென
நினைவுகளாய் நிறைந்தவளே
ந‌ட்பின் இலக்கணமே,
நேசத்தின் பிறப்பிடமே!

நட்பெனும் கடல் மூழ்கி,
நான் கண்ட நல்முத்தே

மனமெனும் சோலையிலே
மணம் வீசி மலர்ந்தவளே!

வளங்கள் பல நீ வாழ்வில் கண்டு
வாழிய வாழிய பல்லாண்டு!

கருத்துகள் இல்லை: